போபால், ஆக.5- மத்தியப் பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ-வின் மகன் பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தலைமறைவாகி உள்ளார். இதே மாநிலத்தில், பாஜக எம்எல்ஏ-வின் பிரதிநிதி, பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞரின் முகத்தில் சிறுநீர் கழித்த வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது இந்தச் சம்பவம் அடுத்த அதிர்ச்சி யை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவு கான் உள்ளார். இங்குள்ள சிங்குர்லி தொகு தியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக இருப்பவர் ராம் லாலு வைஷ்யா. இவரது மகன் பெயர் விவேகா னந்த் வைஷ்யா. இவருக்கு 40 வயது ஆகி றது. இந்நிலையில்தான் இரண்டு நாட்க ளுக்கு முன்பு, விவேகானந்த் வைஷ்யா வுக்கும், இன்னொரு தரப்புக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திரம டைந்த விவேகானந்த் வைஷ்யா தனது துப்பாக்கியை எடுத்து மிரட்டியுள்ளார். மேலும் அவர் பழங்குடியினத்தை சேர்ந்த சூர்யா பிரகாஷ் கைர்வார் (34) என்பவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு வேகமாக சென் றுள்ளார். இதில் கையில் குண்டு காயமடைந்த சூர்யா பிரகாஷ் கைர்வார் உயிருக்கு போரா டிய நிலையில், அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு டாக்டர் கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஜக எம்எல்ஏ ராம் லாலு வைஷ்யாவின் மகனான விவேகா னந்த் வைஷ்யாவை தீவிரமாக தேடி வரு கின்றனர். முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை 21 அன்று ஊழியரான சஞ்சீவ் சுக்லா என்பவ ரையும், விவேகானந்த் வைஷ்யா துப்பாக்கி யால் சுட்டு இருந்தார். இந்த வழக்கில் அவர் ஜாமீனில் உள்ள நிலையில்தான், தற்போது பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞரை யும் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.